muthu

muthu
muthu

wwe slide

kural

அட்சய திருதி

Wednesday 3 August 2011

அட்சய திருதி

அட்சய திருதி அன்று விடியற்காலை எழுந்து தினசரி கடமைகளை முடித்துவிட்டு, தன் வீட்டிற்கு சமைக்கும்போது கூடவே 15 பேர்களுக்கும் சேர்த்து தன் கையாலேயே சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து, அத்துடன் தண்ணீர் பாக்கெட், ஊறுகாய், சிப்ஸ் எல்லாவற்றையும் 15 உறைகளில் போட்டு எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் பிச்சை எடுப்போர் மற்றும் செருப்புகளை பார்த்துக்கொள்ளும் கிழவி கண்ணம்மா, எல்லோருக்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வீடு திரும்பினாள் வனிதா
***
”பாட்டி, என்ன இன்னிக்கு இவ்ளோ சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க, ஏ அப்பா வித விதமா இருக்கே” என்று கேட்டான் கண்ணம்மாவின் பேரன்.

“அதுவா இன்னிக்கு என்னமோ விசேஷமாம். நிறைய பேருங்க சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாங்க. ம். இதுக்கு பதிலா காசோ, இல்ல வெச்சு நாளைக்கு சாப்பிடற மாதிரி ரொட்டி, பிஸ்கெட் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்”.

“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக்கத்து குடிசையிலே இருக்கறவங்களுக்கு குடுத்துடலாமே” என்றான் பேரன்.

0 comments:

Post a Comment

vedio

vedio

thankyou


Custom Glitter Text
நன்றி