muthu

muthu
muthu

wwe slide

kural

JULIUS CAESAR: HISTORICAL BACKGROUND

Tuesday 16 August 2011



JULIUS CAESAR: HISTORICAL BACKGROUND




102/100 BCE: Gaius Julius Caesar was born (by Caesarean section according to an unlikely legend) of Aurelia and Gaius Julius Caesar, a praetor. His family had noble, patrician roots, although they were neither rich nor influential in this period. His aunt Julia was the wife of Gaius Marius, leader of the Popular faction.

c. 85 BCE: His father died, and a few years later he was betrothed and possibly married to a wealthy young woman, Cossutia. This betrothal/marriage was soon broken off, and at age 18 he married Cornelia, the daughter of a prominent member of the Popular faction; she later bore him his only legitimate child, a daughter, Julia. When the Optimate dictator, Sulla, was in power, he ordered Caesar to divorce her; when Caesar refused, Sulla proscribed him (listed him among those to be executed), and Caesar went into hiding. Caesar's influential friends and relatives eventually got him a pardon.

c. 79 BCE: Caesar, on the staff of a military legate, was awarded the civic crown (oak leaves) for saving the life of a citizen in battle. His general sent him on an embassy to Nicomedes, the king of Bithynia, to obtain a fleet of ships; Caesar was successful, but subsequently he became the butt of gossip that he had persuaded the king (a homosexual) only by agreeing to sleep with him. When Sulla died in 78, Caesar returned to Rome and began a career as a orator/lawyer (throughout his life he was known as an eloquent speaker) and a life as an elegant man-about-town.

75 BCE: While sailing to Greece for further study, Caesar was kidnapped by Cilician pirates and held for ransom. When informed that they intended to ask for 20 talents, he is supposed to have insisted that he was worth at least 50. He maintained a friendly, joking relationship with the pirates while the money was being raised, but warned them that he would track them down and have them crucified after he was released. He did just that, with the help of volunteers, as a warning to other pirates, but he first cut their throats to lessen their suffering because they had treated him well.

72 BCE: Caesar was elected military tribune. (Note that Pompey and Crassus were the consuls for 70 BCE.)

69 BCE: He spoke at the funerals of both his aunt, Julia, and his wife, Cornelia. On both occasions, he emphasized his connections with Marius and the ancient nobility of his family, descended from the first kings on his mother's side and from the gods on his father's (revealing a notable talent for self-dramatization and a conception that there was something exceptional about him).

68/67 BCE: Caesar was elected quaestor and obtained a seat in the Senate; he married Pompeia, a granddaughter of Sulla. Caesar supported Gnaeus Pompey and helped him get an extraordinary generalship against the Mediterranean pirates, later extended to command of the war against King Mithridates in Asia Minor


65 BCE: He was elected curule aedile and spent lavishly on games to win popular favor; large loans from Crassus made these expenditures possible. There were rumors that Caesar was having an affair with Gnaeus Pompey's wife, Mucia, as well as with the wives of other prominent men.

63 BCE: Caesar spent heavily in a successful effort to get elected pontifex maximus (chief priest); in 62 he was elected praetor. He divorced Pompeia because of her involvement in a scandal with another man, although the man had been acquitted in the law courts; Caesar is reported to have said, “The wife of Caesar must be above suspicion,” suggesting that he was so exceptional that anyone associated with him had to be free of any hint of scandal. In 61 he was sent to the province of Further Spain as propraetor.

60 BCE: He returned from Spain and joined with Pompey and Crassus in a loose coalition called by modern historians “The First Triumvirate” and by his enemies at the time “the three-headed monster.” In 62, Pompey had returned victorious from Asia, but had been unable to get the Senate to ratify his arrangements and to grant land to his veteran soldiers because he had disbanded his army on his return and Crassus was blocking his efforts. Caesar persuaded the two men to work together and promised to support their interests if they helped him get elected to the consulship.

59 BCE: Caesar was elected consul against heavy Optimate opposition led by Marcus Porcius Cato, a shrewd and extremely conservative politician. Caesar married his only daughter, Julia, to Pompey to consolidate their alliance; he himself married Calpurnia, the daughter of a leading member of the Popular faction. Caesar pushed Pompey's measures through, helped Crassus' proposals, and got for himself a five-year term as proconsul of Gaul after his consulship was over. However, he used some strong-arm methods in the Assembly and completely cowed his Optimate colleague in the consulship, Bibulus, so that jokers referred to the year as “the consulship of Julius and Caesar” (instead of “the consulship of Caesar and Bibulus”). Caesar was safe from prosecution for such actions as long as he held office, but once he became a private citizen again he could be prosecuted by his enemies in the Senate.

58 BCE: Caesar left Rome for Gaul; he would not return for 9 years, in the course of which he would conquer most of what is now central Europe, opening up these lands to Mediterranean civilization—a decisive act in world history. However, much of the conquest was an act of aggression prompted by personal ambition (not unlike the conquests of Alexander the Great). Fighting in the summers, he would return to Cisalpine Gaul (northern Italy) in the winters and manipulate Roman politics through his supporters (see this map of Caesar's Gallic campaigns).

56 BCE: Caesar, Pompey, and Crassus met in Caesar's province to renew their coalition, since Pompey had been increasingly moving toward the Optimate faction. Pompey and Crassus were to be consuls again, and Caesar's command in Gaul was extended until 49 BCE.


54 BCE: Caesar led a three-month expedition to Britain (the was the first Roman crossing of the English Channel), but he did not establish a permanent base there. Meanwhile, Caesar's coalition with Pompey was increasingly strained, especially after Julia died in childbirth in 54. In the following year, Crassus received command of the armies of the East but was defeated and killed by the Parthians.

52 BCE: Rioting in Rome led to Pompey's extra-legal election as “consul without a colleague.” Without Julia and Crassus, there was little to bond Caesar and Pompey together, and Pompey moved to the Optimate faction, since he had always been eager for the favor of the aristocrats.

51 BCE: The conquest of Gaul effectively completed, Caesar set up an efficient provincial administration to govern the vast territories; he published his history The Gallic Wars. The Optimates in Rome attempted to cut short Caesar's term as governor of Gaul and made it clear that he would be immediately prosecuted if he returned to Rome as a private citizen (Caesar wanted to run for the consulship in absentia so that he could not be prosecuted). Pompey and Caesar were maneuvered into a public split; neither could yield to the other without a loss of honor, dignity, and power.

49 BCE: Caesar tried to maintain his position legally, but when he was pushed to the limit he led his armies across the Rubicon River (the border of his province), which was automatic civil war. Pompey's legions were in Spain, so he and the Senate retreated to Brundisium and from there sailed to the East. Caesar quickly advanced to Rome, set up a rump Senate and had himself declared dictator. Throughout his campaign, Caesar practiced—and widely publicized—his policy of clemency (he would put no one to death and confiscate no property). In a bold, unexpected move, Caesar led his legions to Spain, to prevent Pompey's forces from joining him in the East; he allegedly declared, “I am off to meet an army without a leader; when I return, I shall meet a leader without an army.” After a remarkably short campaign, he returned to Rome and was elected consul, thus (relatively) legalizing his position.

48 BCE: Pompey and the Optimate faction had established a strong position in Greece by this time, and Caesar, in Brundisium, did not have sufficient ships to transport all his legions. He crossed with only about 20,000 men, leaving his chief legate, Mark Antony, in Brundisium to try to bring across the rest of the soldiers. After some rather desperate situations for Caesar, the rest of his forces finally landed, though they were greatly outnumbered by Pompey's men. In the final battle, on the plains of Pharsalus, it is estimated that Pompey had 46,000 men to Caesar's 21,000. By brilliant generalship, Caesar was victorious, though the toll was great on both sides; Caesar pardoned all Roman citizens who were captured, including Brutus, but Pompey escaped, fleeing to Egypt.

October 2, 48 BCE: Caesar, with no more than 4,000 legionaries, landed in Alexandria; he was presented, to his professed horror, with the head of Pompey, who had been betrayed by the Egyptians. Caesar demanded that the Egyptians pay him the 40 million sesterces he was owed because of his military support some years earlier for the previous ruler, Ptolemy XII (“The Flute Player”), who had put down a revolt against his rule with Caesar's help. After Ptolemy XII's death, the throne had passed to his oldest children, Cleopatra VII and Ptolemy XIII, as joint heirs. When Caesar landed, the eunuch Pothinus and the Egyptian general Achillas, acting on behalf of Ptolemy XIII (at this time about 12 years old), had recently driven Cleopatra (at this time about 20-21 years old) out of Alexandria. Cleopatra had herself smuggled into the palace in Alexandria wrapped in a rug (purportedly a gift for Caesar) and enlisted his help in her struggle to control the Egyptian throne. Like all the Ptolemies, Cleopatra was of Macedonian Greek descent; she was highly intelligent and well-educated. Caesar saw her as a useful ally as well as a captivating female, and he supported her right to the throne. Through the treachery of Pothinus and the hostility of the Egyptian people to the Romans, Achillas and an army of 20,000 besieged the palace. Caesar managed to hold the palace itself and the harbor; he had Pothinus executed as a traitor but allowed the young Ptolemy to join the army of Achillas. When he ordered the Egyptian fleet burnt, the great Library of Alexandria was accidently consumed in the flames.



February, 47 BCE: After some months under siege, Caesar tried unsuccessfully to capture Pharos, a great lighthouse on an island in the harbor; at one point when cut off from his men he had to jump in the water and swim to safety. Plutarch says that he swam with one hand, using the other to hold some important papers above the water; Suetonius adds that he also towed his purple general's cloak by holding it in his teeth so that it would not be captured by the Egyptians.

March, 47 BCE: Caesar had sent for reinforcements, two Roman legions and the army of an ally, King Mithridates; when they arrived outside Alexandria he marched out to join them and on March 26 defeated the Egyptian army (Ptolemy XIII died in this battle). Although he had been trapped in the palace for nearly six months and had been unable to exert a major influence on the conduct of the civil war, which was going rather badly without him, Caesar nevertheless remained in Egypt until June, even cruising on the Nile with Cleopatra to the southern boundary of her kingdom.

June 23, 47 BCE: Caesar left Alexandria, having established Cleopatra as a client ruler in alliance with Rome; he left three legions under the command of Rufio, as legate, in support of her rule. Either immediately before or soon after he left Egypt, Cleopatra bore a son, whom she named Caesarion, claiming that he was the son of Caesar.

August, 47 BCE: After leaving Alexandria, Caesar swept through Asia Minor to settle the disturbances there. On August 1, he met and immediately overcame Pharnaces, a rebellious king; he later publicized the rapidity of this victory with the slogan veni, vidi, vici (“I came, I saw, I overcame”).

October, 47 BCE: Caesar arrived back in Rome and settled the problems caused by the mismanagement of Antony. When he attempted to sail for Africa to face the Optimates (who had regrouped under Cato and allied with King Juba of Numidia), his legions mutinied and refused to sail. In a brilliant speech, Caesar brought them around totally, and after some difficult battles decisively defeated the Optimates at Thapsus, after which Cato committed suicide rather than be pardoned by Caesar.




Voice Recognition

Friday 5 August 2011


Voice Recognition

The field of computer science that deals with designing computer systems that can recognize spoken words. Note that voice recognition implies only that the computer can take dictation, not that it understands what is being said. Comprehending human languages falls under a different field of computer science called natural language processing. A number of voice recognition systems are available on the market. The most powerful can recognize thousands of words. However, they generally require an extended training session during which the computer system becomes accustomed to a particular voice and accent.Such systems are said to be speaker dependent.

Many systems also require that the speaker speak slowly and distinctly and separate each word with a short pause. These systems are called discrete speech systems. Recently, great strides have been made in continuous speech systems -- voice recognition systems that allow you to speak naturally. There are now several continuous-speech systems available for personal computers.

Because of their limitations and high cost, voice recognition systems have traditionally been used only in a few specialized situations. For example, such systems are useful in instances when the user is unable to use a keyboard to enter data because his or her hands are occupied or disabled. Instead of typing commands, the user can simply speak into a headset. Increasingly, however, as the cost decreases and performance improves, speech recognition systems are entering the mainstream and are being used as an alternative to keyboards.

The use of parallel processing and superconductors is helping to make artificial intelligence a reality. Parallel processing is the simultaneous use of more than one CPU to execute a program. Ideally, parallel processing makes a program run faster because there are more engines (CPUs) running it. In practice, it is often difficult to divide a program in such a way that separate CPUs can execute different portions without interfering with each other.

Most computers have just one CPU, but some models have several. There are even computers with thousands of CPUs. With single-CPU computers, it is possible to perform parallel processing by connecting the computers in a network. However, this type of parallel processing requires very sophisticated software called distributed processing software.

Note that parallel processing differs from multitasking, in which a single CPU executes several programs at once.

Parallel processing is also called parallel computing.

Quantum computation and molecular and nano-technology will radically change the face of computers in years to come. First proposed in the 1970s, quantum computing relies on quantum physics by taking advantage of certain quantum physics properties of atoms or nuclei that allow them to work together as quantum bits, or qubits, to be the computer's processor and memory. By interacting with each other while being isolated from the external environment,qubits can perform certain calculations exponentially faster than conventional computers.

Qubits do not rely on the traditional binary nature of computing. While traditional computers encode information into bits using binary numbers, either a 0or 1, and can only do calculations on one set of numbers at once, quantum computers encode information as a series of quantum-mechanical states such as spin directions of electrons or polarization orientations of a photon that might represent a 1 or a 0, might represent a combination of the two or might represent a number expressing that the state of the qubit is somewhere between 1 and 0, or a superposition of many different numbers at once. A quantum computer can doan arbitrary reversible classical computation on all the numbers simultaneously, which a binary system cannot do, and also has some ability to produce interference between various different numbers. By doing a computation on many different numbers at once,then interfering the results to get a single answer, a quantum computer has the potential to be much more powerful than a classical computer of the same size.In using only a single processing unit, a quantum computer can naturally perform myriad operations in parallel.

Quantum computing is not well suited for tasks such as word processing and email, but it is ideal for tasks such as cryptography and modeling and indexing very large databases.

Nanotechnology is a field of science whose goal is to control individual atoms and molecules to create computer chips and other devices that are thousands of times smaller than current technologies permit. Current manufacturing processes use lithography to imprint circuits on semiconductor materials. While lithography has improved dramatically over the last two decades -- to the point where some manufacturing plants can produce circuits smaller than one micron(1,000 nanometers) -- it still deals with aggregates of millions of atoms. It is widely believed that lithography is quickly approaching its physical limits. To continue reducing the size of semiconductors, new technologies that juggle individual atoms will be necessary. This is the realm of nanotechnology.

Although research in this field dates back to Richard P. Feynman's classic talk in 1959, the term nanotechnology was first coined by K. Eric Drexler in1986 in the book Engines of Creation.

In the popular press, the term nanotechnology is sometimes used to refer to any sub-micron process,including lithography. Because of this, many scientists are beginning to use the term molecular nanotechnology when talking about true nanotechnology at the molecular level.

The goal of fifth-generation computing is to develop devices that respond to natural language input and are capable of learning and self-organization.

Here natural language means a human language. For example, English, French, and Chinese are natural languages. Computer languages, such as FORTRAN and C,are not.

Probably the single most challenging problem in computer science is to develop computers that can understand natural languages. So far, the complete solution to this problem has proved elusive, although great deal of progress has been made. Fourth-generation languages are the programming languages closest to natural languages.

Fifth Generation - Present and Beyond


Fifth Generation - Present and Beyond: Artificial Intelligence

Fifth generation computing devices, based on artificial intelligence, are still in development,though there are some applications, such as voice recognition, that are being used today.

Artificial Intelligence is the branch of computer science concerned with making computers behave like humans. The term was coined in 1956 by John McCarthy at the Massachusetts Institute of Technology. Artificial intelligence includes:

* Games Playing: programming computers to play games such as chess and checkers

* Expert Systems: programming computers to make decisions in real-life situations (for example, some expert systems help doctors diagnose diseases based on symptoms)

* Natural Language: programming computers to understand natural human languages

* Neural Networks: Systems that simulate intelligence by attempting to reproduce the types of physical connections that occur in animal brains

* Robotics: programming computers to see and hear and react to other sensory stimuli

Currently, no computers exhibit full artificial intelligence (that is, are able to simulate human behavior). The greatest advances have occurred in the field of games playing. The best computer chess programs are now capable of beating humans. In May,1997, an IBM super-computer called Deep Blue defeated world chess champion Gary Kasparov in a chess match.

In the area of robotics, computers are now widely used in assembly plants, but they are capable only of very limited tasks. Robots have great difficulty identifying objects based on appearance or feel, and they still move and handle objects clumsily.

Natural-language processing offers the greatest potential rewards because it would allow people to interact with computers without needing any specialized knowledge. You could simply walk up to a computer and talk to it. Unfortunately, programming computers to understand natural languages has proved to be more difficult than originally thought. Some rudimentary translation systems that translate from one human language to another are in existence, but they are not nearly as good as human translators.

There are also voice recognition systems that can convert spoken sounds into written words, but they do not understand what they are writing; they simply take dictation. Even these systems are quite limited -- you must speak slowly and distinctly.

In the early 1980s, expert systems were believed to represent the future of artificial intelligence and of computers in general. To date, however, they have not lived up to expectations. Many expert systems help human experts in such fields as medicine and engineering, but they are very expensive to produce and are helpful only in special situations.

Today, the hottest area of artificial intelligence is neural networks, which are proving successful in an umber of disciplines such as voice recognition and natural-language processing.

There are several programming languages that are known as AI languages because they are used almost exclusively for AI applications. The two most common are LISP and Prolog.

Fourth Generation - 1971-Present


Fourth Generation - 1971-Present: Microprocessors

The microprocessor brought the fourth generation of computers, as thousands of integrated circuits we rebuilt onto a single silicon chip. A silicon chip that contains a CPU. In the world of personal computers,the terms microprocessor and CPU are used interchangeably. At the heart of all personal computers and most workstations sits a microprocessor. Microprocessors also control the logic of almost all digital devices, from clock radios to fuel-injection systems for automobiles.

Three basic characteristics differentiate microprocessors:

* Instruction Set: The set of instructions that the microprocessor can execute.

* Bandwidth: The number of bits processed in a single instruction.

* Clock Speed: Given in megahertz (MHz), the clock speed determines how many instructions per second the processor can execute.

In both cases, the higher the value, the more powerful the CPU. For example, a 32-bit microprocessor that runs at 50MHz is more powerful than a 16-bitmicroprocessor that runs at 25MHz.

What in the first generation filled an entire room could now fit in the palm of the hand. The Intel 4004chip, developed in 1971, located all the components of the computer - from the central processing unit and memory to input/output controls - on a single chip.

Abbreviation of central processing unit, and pronounced as separate letters. The CPU is the brains of the computer. Sometimes referred to simply as the processor or central processor, the CPU is where most calculations take place. In terms of computing power,the CPU is the most important element of a computer system.

On large machines, CPUs require one or more printed circuit boards. On personal computers and small workstations, the CPU is housed in a single chip called a microprocessor.

Two typical components of a CPU are:

* The arithmetic logic unit (ALU), which performs arithmetic and logical operations.

* The control unit, which extracts instructions from memory and decodes and executes them, calling on the ALU when necessary.

In 1981 IBM introduced its first computer for the home user, and in 1984 Apple introduced the Macintosh. Microprocessors also moved out of the realm of desktop computers and into many areas of life as more and more everyday products began to use microprocessors.

As these small computers became more powerful, they could be linked together to form networks, which eventually led to the development of the Internet. Fourth generation computers also saw the development of GUI's, the mouse and handheld devices

Third Generation - 1964-1971


Third Generation - 1964-1971: Integrated Circuits

The development of the integrated circuit was the hallmark of the third generation of computers. Transistors were miniaturized and placed on silicon chips, called semiconductors, which drastically increased the speed and efficiency of computers.

A nonmetallic chemical element in the carbon family of elements. Silicon - atomic symbol "Si" - is the second most abundant element in the earth's crust, surpassed only by oxygen. Silicon does not occur uncombined in nature. Sand and almost all rocks contain silicon combined with oxygen, forming silica. When silicon combines with other elements, such as iron, aluminum or potassium, a silicate is formed. Compounds of silicon also occur in the atmosphere, natural waters,many plants and in the bodies of some animals.

Silicon is the basic material used to make computer chips, transistors, silicon diodes and other electronic circuits and switching devices because its atomic structure makes the element an ideal semiconductor. Silicon is commonly doped, or mixed,with other elements, such as boron, phosphorous and arsenic, to alter its conductive properties.

A chip is a small piece of semi conducting material(usually silicon) on which an integrated circuit is embedded. A typical chip is less than ¼-square inches and can contain millions of electronic components(transistors). Computers consist of many chips placed on electronic boards called printed circuit boards. There are different types of chips. For example, CPU chips (also called microprocessors) contain an entire processing unit, whereas memory chips contain blank memory.

Semiconductor is a material that is neither a good conductor of electricity (like copper) nor a good insulator (like rubber). The most common semiconductor materials are silicon and germanium. These materials are then doped to create an excess or lack of electrons.

Computer chips, both for CPU and memory, are composed of semiconductor materials. Semiconductors make it possible to miniaturize electronic components, such as transistors. Not only does miniaturization mean that the components take up less space, it also means that they are faster and require less energy.

Second Generation - 1956-1963:


Second Generation - 1956-1963: Transistors

Transistors replaced vacuum tubes and ushered in the second generation computer. Transistor is a device composed of semiconductor material that amplifies a signal or opens or closes a circuit. Invented in 1947 at Bell Labs, transistors have become the key ingredient of all digital circuits, including computers. Today's latest microprocessor contains tens of millions of microscopic transistors.

Prior to the invention of transistors, digital circuits were composed of vacuum tubes, which had many disadvantages. They were much larger, required more energy, dissipated more heat, and were more prone to failures. It's safe to say that without the invention of transistors, computing as we know it today would not be possible.

The transistor was invented in 1947 but did not see widespread use in computers until the late 50s. The transistor was far superior to the vacuum tube,allowing computers to become smaller, faster, cheaper,more energy-efficient and more reliable than their first-generation predecessors. Though the transistor still generated a great deal of heat that subjected the computer to damage, it was a vast improvement over the vacuum tube. Second-generation computers still relied on punched cards for input and printouts for output.

Second-generation computers moved from cryptic binary machine language to symbolic, or assembly, languages,which allowed programmers to specify instructions in words. High-level programming languages were also being developed at this time, such as early versions of COBOL and FORTRAN. These were also the first computers that stored their instructions in their memory, which moved from a magnetic drum to magnetic core technology.

The first computers of this generation were developed for the atomic energy industry.

The First Generation Computers


First Generation - 1940-1956: Vacuum Tubes

The first computers used vacuum tubes for circuitry and magnetic drums for memory, and were often enormous, taking up entire rooms. A magnetic drum,also referred to as drum, is a metal cylinder coated with magnetic iron-oxide material on which data and programs can be stored. Magnetic drums were once use das a primary storage device but have since been implemented as auxiliary storage devices.

The tracks on a magnetic drum are assigned to channels located around the circumference of the drum, forming adjacent circular bands that wind around the drum. A single drum can have up to 200 tracks. As the drum rotates at a speed of up to 3,000 rpm, the device's read/write heads deposit magnetized spots on the drum during the write operation and sense these spots during a read operation. This action is similar to that of a magnetic tape or disk drive.

They were very expensive to operate and in addition to using a great deal of electricity, generated a lot of heat, which was often the cause of malfunctions. First generation computers relied on machine language to perform operations, and they could only solve one problem at a time. Machine languages are the only languages understood by computers. While easily understood by computers, machine languages are almost impossible for humans to use because they consist entirely of numbers. Computer Programmers, therefore, use either high level programming languages or an assembly language programming. An assembly language contains the same instructions as a machine language, but the instructions and variables have names instead of being just numbers.

Programs written in high level programming languages retranslated into assembly language or machine language by a compiler. Assembly language program retranslated into machine language by a program called an assembler (assembly language compiler).

Every CPU has its own unique machine language. Programs must be rewritten or recompiled, therefore, to run on different types of computers. Input was based onpunch card and paper tapes, and output was displayed on printouts.

The UNIVAC and ENIAC computers are examples of first-generation computing devices. The UNIVAC was the first commercial computer delivered to a business client, the U.S. Census Bureau in 1951.

Acronym for Electronic Numerical Integrator And Computer, the world's first operational electronic digital computer, developed by Army Ordnance to compute World War II ballistic firing tables. The ENIAC, weighing 30 tons, using 200 kilowatts of electric power and consisting of 18,000 vacuum tubes,1,500 relays, and hundreds of thousands of resistors,capacitors, and inductors, was completed in 1945. In addition to ballistics, the ENIAC's field of application included weather prediction, atomic-energy calculations, cosmic-ray studies, thermal ignition,random-number studies, wind-tunnel design, and other scientific uses. The ENIAC soon became obsolete as the need arose for faster computing speeds.

குட்டிக் குட்டி கதைகள்

Wednesday 3 August 2011

வைராக்கியம்

இரவு மணி ஏழு

”அப்பா, அம்மா வேலைக்குப்போயிட்டு வந்ததுலே இருந்து அழுதுகிட்டிருக்காங்க” வீட்டிற்குள் நுழைந்த ரமேஷிடம் இரண்டு குழந்தைகளும் கோரஸாக சொன்னார்கள்.
“விமலா, என்ன ஆச்சு? ஆபிசில் ஏதாவது தகராறா? நீ இப்படி அழுதுகிட்டிருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. சொல்லும்மா” என்றார் ரமேஷ்.

விமலா, “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பேருந்தில் வரும்போது ஒரு பெண்மணி 15 வயது மதிக்கத்தக்க மகனை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அந்தப்பையனுக்கு மனநிலை சரியில்லை. அரை மணி நேரம் பேருந்தில் அவர்களுடன் வந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அவங்க ரெண்டு பேர் முகத்தையும் மறக்க முடியலை. ஒரே அழுகையா வருதுங்க. கடவுள் நமக்கு எல்லாம் கொடுத்திருக்கார். நல்ல நிலையில் இருக்கோம். அப்பக்கூட இதையெல்லாம் நம்ப உணரலையே. சாரிங்க. நானும் உங்க கிட்ட அப்பப்ப சண்டை போட்டுடறேன்“

“நீ சொல்றது ரொம்ப சரி விமலா. கடவுளுக்கு ஒவ்வொரு கணமும் நன்றி சொல்ற நிலையில தான் நாம்ப இருக்கோம். நீ இப்ப எதுவும் சமைக்க வேண்டாம். வா நாலு பேரும் வெளியில போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம். நாளையிலேயிருந்து பார் நான் எப்படி நடந்துக்கறேன்னு“

காலை எட்டு மணி

”நேத்து இங்க வெச்ச என்னோட ஆபீஸ் பைல் எங்க, இந்த வீட்டிலே ஒண்ணு கூட ஒழுங்கா இருக்காது..” உச்சஸ்தாயியில் கத்தத்தொடங்கினான் ரமேஷ்

“ஏங்க நான் என்ன வீட்டிலேயா உக்காந்துண்டிருக்கேன். உங்க பொருளை நீங்கதான் ஒழுங்கா எடுத்து வெச்சுக்கணும்..” விமலா
புண்ணியம்

அறுபதாம் கல்யாணம் முடிந்து பணி ஓய்வும் பெற்ற ராமநாதன் மனைவி விஜயாவிடம் “விஜயா, இதுநாள் வரை நம் குடும்பம், நம் பிள்ளைகள் என்று இருந்து விட்டோம். “குடும்ப விளக்கில்” பாரதிதாசன் சொன்னதுபோல் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நாளையிலிருந்து நானே காலையில் போய் பால் வாங்கி வருகிறேன். பூ வாங்குவதையும் நிறுத்திவிடு. தினமும் மாலையில் சந்தைக்குப்போய் கறிகாய், பூ எல்லாம் வாங்கி வந்து விடுகிறேன். சந்தையில் மலிவாக இருக்கும் அல்லவா? கொஞ்சம் சிக்கனமாக இருப்போம். என் நண்பன் ஒரு அமைப்பை ஆரம்பித்திருக்கிறான். ஏழைக்குழந்தைகளுக்கு உதவ. அதற்கு மாதா மாதம் பணம் அனுப்புவோம். போற வழிக்கு புண்ணியம் சேர்ப்போம்” என்று சொன்னார்.

* * *
மறுநாள் மதியம் பூக்காரி பொன்னாம்மா மாடி ஏறி வந்தாள். “இன்னாம்மா! வெள்ளிக்கெழமையும் அதுவுமா பூ வாணான்னுட்டியாமே. பால் கூட போடவேணாம்ன்னுட்டியாமே. நான் பெத்தது ஒண்ணு. அதுவும் தறுதல. மருமக இன்னடான்னா மூணு பொட்டப்புள்ளங்களை பெத்து கொடுத்துட்டு கண்ணை மூடிட்டா. நாலு வூட்டுக்கு பால் கவர் போட்டு, பூ வித்து, வூட்டு வேலை செஞ்சுதானமா அதுங்களுக்கு கஞ்சி ஊத்தறேன். படிக்க வெக்கறேன்.” என்றாள்.

”இல்ல பொன்னம்மா. நான் ஒருநாளைக்கு வேண்டாம்ன்னு சொல்ல நினைச்சதை தப்பா சொல்லிட்டேன். நாளையிலே இருந்து பாலும் போடு, பூவும் கொண்டு வந்து கொடு. இரு நல்ல வெய்யில் நேரம்.. மோர் தரேன். குடிச்சுட்டுப்போ” என்று சொல்லிவிட்டு ஈசி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த கணவனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள்.

திருப்தி

திருப்தி

”என்ன வித்யா. இந்த தீபாவளிக்கு பட்டுப்புடைவையா?”

“ம்க்கும். அதை ஏன் கேக்கற? எங்க வீட்டுக்காரர் இந்த முறை கண்டிப்பா அவரோட ரெண்டு தங்கைக்கும் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டார். அதனால சில்க் கோட்டாதான் வாங்கிண்டேன். ரெண்டு சாதா காட்டன் புடைவையும் எடுத்துண்டேன்.”

இது அலுவலகத்திலிருந்து ரயிலில் வீடு வந்து கொண்டிருந்த இரண்டு தோழிகளுக்கு இடையே நடந்த பேச்சு.

அப்பொழுது ஒரு பெண் அழுக்குத்துணி உடுத்தி குளித்துத் தோய்த்து பலநாட்கள் ஆனது போல் இருந்தவள் லாலலா என்று பாடிக்கொண்டே ஏறினாள். ”பார்த்து நில்லம்மா.. வெளியிலே விழுந்துடப்போற” என்றாள் வித்யா. அந்தப்பெண் “ஏம்மா ஒரு கணக்கு சொல்லு. வீட்டில 5 பொம்பளைங்க இருக்கோம். 5 பேருக்கும் தீபாவளிக்கு வளையல் வாங்கலாம்ன்னு இருக்கேன். ஒரு சோடி 5 ரூபான்னா 5 எவ்வளோ?” என்றாள். வித்யா “25 ரூபாய் என்றாள்”. ”அம்மாடியோ அவ்ளோவா?” என்றாள் அந்தப்பெண்.

2000 ரூபாய்க்கு தனக்கு துணிமணி வாங்கிகொண்ட வித்யாவுக்கு யாரோ மண்டையில ணங்கென்று கொட்டியதுபோல் இருந்தது.

அட்சய திருதி

அட்சய திருதி

அட்சய திருதி அன்று விடியற்காலை எழுந்து தினசரி கடமைகளை முடித்துவிட்டு, தன் வீட்டிற்கு சமைக்கும்போது கூடவே 15 பேர்களுக்கும் சேர்த்து தன் கையாலேயே சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து, அத்துடன் தண்ணீர் பாக்கெட், ஊறுகாய், சிப்ஸ் எல்லாவற்றையும் 15 உறைகளில் போட்டு எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் பிச்சை எடுப்போர் மற்றும் செருப்புகளை பார்த்துக்கொள்ளும் கிழவி கண்ணம்மா, எல்லோருக்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வீடு திரும்பினாள் வனிதா
***
”பாட்டி, என்ன இன்னிக்கு இவ்ளோ சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க, ஏ அப்பா வித விதமா இருக்கே” என்று கேட்டான் கண்ணம்மாவின் பேரன்.

“அதுவா இன்னிக்கு என்னமோ விசேஷமாம். நிறைய பேருங்க சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாங்க. ம். இதுக்கு பதிலா காசோ, இல்ல வெச்சு நாளைக்கு சாப்பிடற மாதிரி ரொட்டி, பிஸ்கெட் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்”.

“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக்கத்து குடிசையிலே இருக்கறவங்களுக்கு குடுத்துடலாமே” என்றான் பேரன்.

நல்ல கதைகள்

ஞானியிடம் சென்ற ஒருவர் ஐயா, உங்கள் சீடனைப் பற்றிய முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்வதற்காக வந்திருக்கிறேன் என்றார்.
ஞானி அவரிடம் முதலில் எனது மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல் என்று விட்டு ” நீ சொல்லப்போகும் விஷயம் உன் முன் நடந்ததா? எனக் கேட்டார். வந்தவர் ‘இல்லை’ என்றார்.
அடுத்து ‘நீங்கள் சொல்லப்போவது கெட்ட விஷயமா? நல்ல விஷயமா?’ எனக் கேட்டார்.
கெட்ட விஷயம் வந்தவர் சொன்னார்.
இதைக்கேட்டால் எனக்கு ஏதாவது லாபம் நஷ்டம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை.
உமக்கே உண்மையா பொய்யா எனத் தெரியாது. கேட்காவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை. அதுவோ கெட்ட விஷயம். நல்லதும் உண்மையும் அல்லாத அதை ஏன் நான் கேட்க வேண்டும்? எனக் கேட்ட ஞானி, வந்தவரைத் திருப்பியனுப்பினார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் கதைகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் - On the 248th Birth Anniversary

" ....தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. ... இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்..."



Kattabomman Statueஉலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.

இவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.

சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.

கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.

1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.

அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.

வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.

இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.

இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.

பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.

பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.

கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.

வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்

கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.

கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.



கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.

விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.

தெனாலிராமன் கதைகள்

அரசவை விகடகவியாக்குதல்


அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.


மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.


தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.


இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.


சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.


தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.


அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.


அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.


அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

அகநானூறு

Tuesday 2 August 2011

251. பாலை

தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் 5
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் 10
பணியாமையின், பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை 15
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
மா நிலம் நௌயக் குத்தி, புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி,
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. 20


தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்


252. குறிஞ்சி

இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, 5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் 10
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் போல,
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?


தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார்


153. பாலை

நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
வன்கணாளன் மார்புஉற வளைஇ, 5
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் 10
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, 15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?


மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன்


154. முல்லை

படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, 5
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; 10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15


வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்


155. பாலை

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் 5
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.


தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ


156. மருதம்

முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, 5
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, 10
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, 15
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?


தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்


257. பாலை

வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி, 5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
நுண் கோல் எல் வளை தௌர்க்கும் முன்கை 10
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, 15
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
வெள் அரா மிளிர வாங்கும் 20
பிள்ளை எண்கின் மலைவயினானே.


உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்


158. குறிஞ்சி

'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, 15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?


தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்


159. பாலை

தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் 5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் 10
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் 15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் 20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.


பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்


160. நெய்தல்

ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த 5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி, 10
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது 15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.


தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்


261. பாலை

கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
இலங்கு வளை தௌர்ப்ப வீசி, சிலம்பு நகச் 5
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, 10
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. 15


புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ


262. குறிஞ்சி

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, 5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் 15
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே.


இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்


263. பாலை

தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, 5
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ! 10
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே! 15


மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்


264. முல்லை

மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, 5
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் 10
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? 15


பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்


265. பாலை

புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை 5
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு 10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, 15
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் 20
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!


பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார்


266. மருதம்

கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, 5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் 10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது 15
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச் 20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!


பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர்


267. பாலை

'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, 5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
மை பட்டன்ன மா முக முசுவினம்
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென 10
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை 15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
தோளே தோழி! தவறு உடையவ்வே!


பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ


268. குறிஞ்சி

அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய 5
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, 10
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!


குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்


269. பாலை

தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார், 5
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் 10
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் 15
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும் 20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. 25


பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்


270. நெய்தல்

இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை 5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம் மா மேனி தொல் நலம் தொலைய, 10
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. 15


பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்


271. பாலை

பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, 5
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, 10
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், 15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?


செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்


272. குறிஞ்சி

இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, 5
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் 10
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! 15
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?


இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்


273. பாலை

விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் 5
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு 10
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் 15
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.


பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-அவ்வையார்


274. முல்லை

இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, 5
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, 10
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.


தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்


275. பாலை

ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, 5
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
ஏதிலாளன் காதல் நம்பி, 10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி 15
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?

இராமாவதாரம்

வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, 'ஐய!
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான்' என்று, அவன் நிலை கூறலுற்றான்; 114

'தவன் நுணங்கியரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து, அலரின் மேலைத் திசைமுகன் உணரும் தேவன் -
அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவது எல்லாம்,
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர், எந்தாய்! 115

ஆழியாய்! இவன் ஆகுவான்,
ஏழை வாழ்வுடை எம்முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான், 116

'காலனார் உயிர்க் காலனால்;
காலின் மேல் நிமிர் காலினான்;
மாலினார் கெட, வாகையே,
சூலமே கொடு, சூடினான்; 117

'தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை, உம்பர்கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க, நின்று சுழற்றினான்; 118

'கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான்;
அழிந்து மீன் உக, ஆழி நீர்
இழிந்து, காலினின் எற்றுவான்; 119

'ஊன் உயர்ந்த உரத்தினான்,
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்,
வான் உயர்ந்த வரத்தினான்; 120

'திறம் கொள் சாரி திரிந்த நாள்,
கறங்கு அலாது கணக்கு இலான்;
இறங்கு தாரவன் இன்று காறு
உறங்கலால், உலகு உய்ந்ததால்; 121

'சூலம் உண்டு; அது சூர் உளோர்
காலம் உண்டது; கைக் கொள்வான்;
ஆலம் உண்டவன் ஆழிவாய்,
ஞாலம் உண்டவ! நல்கினான்; 122

'மின்னின் ஒன்றிய விண்ணுளோர்,
'முன் நில்' என்று, அமர் முற்றினார்-
என்னின், என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி, விழித்திலான்; 123

"தருமம் அன்று இதுதான்; இதால்
வரும், நமக்கு உயிர் மாய்வு" எனா,
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான். 124

'மறுத்த தம்முனை, வாய்மையால்
ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்;
வெறுத்தும், 'மாள்வது மெய்' எனா
இறுத்து, நின் எதிர் எய்தினான். 125

'"நன்று இது அன்று நமக்கு" எனா,
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்'
என்று சொல்லி, இறைஞ்சினான். 126
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#242 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:02 PM


சுக்கிரீவன், கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்

என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், 'இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்;
"நன்று" என நினைந்தேன்' என்றான்; நாதனும், 'நயன் இது' என்றான். 127

கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்

'ஏகுதற்கு உரியார் யாரே?' என்றலும், இலங்கை வேந்தன்,
'ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம்
சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென்' என்றான்;
மேகம் ஒப்பானும், 'நன்று, போக!' என்று விடையும் ஈந்தான். 128

தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச் சார்ந்தான்;
வெந் திறலவனுக்கு, 'ஐய! வீடணன் விரைவில் உன்பால்
வந்தனன்' என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான். 129

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#243 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:03 PM


கும்பகருணன் வீடணனிடம் 'நீ வந்தது தகுதி அன்று' எனல்

முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி,
'உய்ந்தனை, ஒருவன் போனாய்' என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள
வந்தது என், தனியே?' என்றான், மழையின் நீர் வழங்கு கண்ணான். 130

'அவயம் நீ பெற்றவாறும், அமரரும் பெறுதல் ஆற்றா,
உவய லோகத்தினுள்ள சிறப்பும், கேட்டு உவந்தேன், உள்ளம்;
கவிஞரின் அறிவு மிக்கோய்! காலன் வாய்க் களிக்கின்றேம்பால்
நவை உற வந்தது என், நீ? அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 131

'"குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று" என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை
உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ! 132

'அறப் பெருந் துணைவர், தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார், தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்;
இறப்பு எனும் பதத்தை விட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை; நினைந்து, என்கொல் பெயர்ந்த வண்ணம்? 133

'அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று, அவன் தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்? 134

'நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும்,
ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்;
வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்! 135

ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்;
மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற;
தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய். 136

'ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலைஎன்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய். 137

'வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை;
திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப்
பொருவ அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின்' என்றான்,
'கருமம் உண்டு உரைப்பது' என்றான்; 'உரை' என, கழறலுற்றான்; 138

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#244 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:04 PM


இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்

'இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139

'எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி! 140

'போதலோ அரிது; போனால், புகலிடம் இல்லை; வல்லே,
சாதலோ சரதம்; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால், உளதாம் ஆவி அநாயமே உகுத்து என்? ஐய!
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். 141

'தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?
தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ? 142

'மக்களை, குரவர்தம்மை, மாதரை மற்றுளோரை,
ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற,
"துக்கம், இத் தொடர்ச்சி" என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! 143

'தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர்
வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ?
ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்? 144

'கண்ணுதல், தீமை செய்ய, கமலத்து முளைத்த தாதை
அண்ணல்தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே?
புண் உறு புலவு வேலோய்! பழியொடும் பொருந்தி, பின்னை,
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ? 145

'உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்;
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்
மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ! 146

'காக்கலாம் நும் முன் தன்னை எனின், அது கண்டது இல்லை;
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும், ஆவது இல்லை;
தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருவில் ஆவி
போக்கலாம்; புகலாம், பின்னை நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ ? 147

'மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை; மண்ணின் மேலா
இறங்கினை; இன்றுகாறும் இளமையும் வறிதே ஏக,
உறங்கினை என்பது அல்லால், உற்றது ஒன்று உளதோ? என், நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது?-ஐயா! 148

திரு மறு மார்பன் நல்க, அனந்தரும் தீர்ந்து, செல்வப்
பெருமையும் எய்தி, வாழ்தி; ஈறு இலா நாளும் பெற்றாய்;
ஒருமையே அரசு செய்வாய்; உரிமையே உனதே; ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை; காலமும் அடுத்தது, ஐயா! 149

'தேவர்க்கும் தேவன் நல்க, இலங்கையில் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை; யார், உனை நலியும் ஈட்டார்?-
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார், காகுத்த வேடம் காட்டி! 150

'உன் மக்கள் ஆகி உள்ளார், உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார், இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
தன் மக்கள் ஆகி உள்ளார், தலையொடும் திரிவர் அன்றே-
புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்? 151

'முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை; "ஈறு உண்டு" என்று இரங்க வேண்டா;
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;-
கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ? 152

'வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்;
காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே;
ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே' என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான். 153
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#245 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:05 PM


கும்பகருணனின் மறுப்புரை

'தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய,
பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்; 154

'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155

'மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ
உலைவு இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்;
தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்;
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால். 156

'கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,
பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி,
ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 157

'தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்? 158

'அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக,
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெருங் கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப, கூசி,
துணை இன்றிச் சேரல் நன்றோ, தோற்றுள கூற்றின் சூழல்? 159

'செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்! 160

'அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன்
தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை,
கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி! 161

'ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட,
சூலம் கொண்டு ஓடி, வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
நீலம் கொள் கடலும் ஓட, நெருப்பொடு காலும் ஓட,
காலம் கொள் உலகும் ஓட, கறங்கு எனத் திரிவென்; காண்டி! 162

'செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின்,
கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம்,
ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில்' என்றான். 163

'தாழ்க்கிற்பாய் அல்லை; என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆகின், எய்தி, அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; "இனி, ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு" என்று,
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழ நிற்பாய்!" என்னச் சொன்னான். 164

'போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி,
மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165

'ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 166
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#246 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:06 PM


வீடணன் விடை பெறுதல்

என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி,
'இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு' என்று விட்டான்;
வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான். 167

வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; 'உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.
குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168


வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்

'கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்;
பிள்ளைமை துறந்தான்' என்னாப் பேதுறும் நிலையன் ஆகி,
வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான். 169

வீடணன் உரையைக் கேட்ட இராமன் கூற்று

எய்திய நிருதர் கோனும், இராமனை இறைஞ்சி, 'எந்தாய்!
உய் திறம் உடையார்க்கு அன்றோ, அறன் வழி ஒழுகும் உள்ளம்?
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன், சிறிதும்' என்றான். 170

கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
நொய்தினில் துளக்கி, 'ஐய! "நுன் எதிர், நும்முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று" என்று இனைய சொன்னேன்;
செய் திறன் இனி வேறு உண்டோ ? விதியை யார் தீர்க்ககிற்பார்?" 171

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#247 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:06 PM


அரக்கர் சேனை வானர சேனையைச் சுற்றி வளைத்தல்

என இனிது உரைக்கும் வேலை, இராக்கதர் சேனை என்னும்
கனை கடல், கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி,
முனை தொழில் முயன்றதாக, மூவகை உலகும் முற்றத்
தனி நெடுந் தூளி ஆர்த்தது; ஆர்த்தில, பரவை தள்ளி, 172

ஓடின புரவி; வேழம் ஓடின; உருளைத் திண் தேர்
ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு;
ஓடின கவந்த பந்தம்; ஆடின அலகை; மேல்மேல்
ஓடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா! 173

மூளையும், தசையும், என்பும், குருதியும், நிணமும், மூரி
வாளொடும் குழம்பு பட்டார், வாள் எயிற்று அரக்கர்; மற்றுஅவ்
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள்;-அம்பொன்
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க. 174

எய்தனர், நிருதர்; கல்லால் எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
பெய்தனர், அரக்கர்; பற்றிப் பிசைந்தனர் அரிகள்; பின்றா
வைதனர், யாதுதானர்; வலித்தனர்; வானரேசர்;
செய்தனர், பிறவும் வெம் போர்; திகைத்தனர், தேவர் எல்லாம். 175

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#248 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:07 PM


கும்பகருணன் போர்

நீரினை ஓட்டும் காற்றும், காற்று எதிர் நிற்கும் நீரும்,
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி,
தேரினை ஓட்டி வந்தான் - திருவினைத் தேவர் தங்கள்
ஊரினை நோக்காவண்ணம், உதிர வேல் நோக்கியுள்ளான். 176

ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப,
பூழியில் பட்டு, செந்நீர்ப் புணரியில் பட்டு, பொங்கும்
சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும், துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே-அவனியில் பட்ட எல்லாம். 177

குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 178

வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்; மலைகளில் புடைக்கும், சுற்றி. 179

பறைந்தனர், அமரர் அஞ்சி; பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன, பறவை எல்லாம்; நெடுந் திசை நான்கும் நான்கும்
மறைந்தன; பெருமை தீர்ந்த, மலைக் குலம்; வற்றி வற்றிக்
குறைந்தன, குரக்கு வெள்ளம்; கொன்றனன், கூற்றும் கூச. 180

'மற்று இனி ஒருவர்மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே; இன்றொடும் பெறுவது ஆமே;
அற்றன, தீங்கும்' என்னா, அரிக் குலத் தலைவர் பற்றி,
எற்றின, எறிந்த, எல்லாம் இணை நெடுந் தோளின் ஏற்றான். 181

கல்லொடு மரனும், வேரும், கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும், எல்லாம், பொடிப் பொடி ஆகிப் போன;
'இல்லை, மற்று எறியத் தக்க, எற்றுவ, சுற்றும்' என்ன,
பல்லொடு பல்லு மென்று பட்டன, குரங்கும் உட்கி. 182

குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி,
சென்று மேல் எழுந்து பற்றி, கைத் தலம் தேயக் குத்தி,
வன் திறல் எயிற்றால் கவ்வி, வள் உகிர் மடியக் கீளா,
'ஒன்றும் ஆகின்றது இல்லை' என்று, இரிந்து ஓடிப் போன. 183
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#249 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:08 PM


நீலன் பொருது தோற்றல்

மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல், கையினால் கடிதின் வாங்கி,
நீலன், மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்;
சூலமே கொண்டு நூறி, முறுவலும் தோன்ற நின்றான். 184

'பெயர்ந்து ஒரு சிகரம் தேடின், அச்சம் ஆம் பிறர்க்கும்' என்னா,
புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான்,
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய, யாரும்
பயம் கொள, கரங்கள் ஓச்சிக் குத்தினான், உதைத்தான், பல் கால். 185

கைத்தலம் சலித்து, காலும் குலைந்து, தன் கருத்து முற்றான்.
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை,
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான், இடது கையால்;
மெய்த்தலை, சூலம் ஓச்சான், வெறுங் கையான் என்று வெள்கி. 186

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#250 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:08 PM


நீலன் தளர்ந்தது கண்டு, அங்கதன் வந்து பொருதல்

ஆண்டு, அது நோக்கி நின்ற அங்கதன், ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி,
'மாண்டனன் அரக்கன் தம்பி' என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன்; அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான். 187

ஏற்ற போது, அனைய குன்றம் எண்ண அருந் துகளது ஆகி,
வீற்று வீற்று ஆகி, ஓடி விழுதலும், கவியின் வெள்ளம்,
'ஊற்றம் ஏது, எமக்கு!' என்று எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சென்று பாதம். 188

இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு,
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது, தருக்கின் வாங்கி,
'மடக்குவாய் உயிரை' என்னா, வீசினன்; அதனை மைந்தன்
தடக் கையால் பிடித்துக் கொண்டான், வானவர் தன்னை வாழ்த்த. 189

பிடித்தது சுழற்றி, 'மற்று அப் பெரு வலி அரக்கன் தன்னை,
இடித்து, உரும் ஏறு, குன்றத்து எரி மடுத்து, இயங்குமா போல்,
அடித்து, உயிர் குடிப்பென்' என்னா, அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
கொடித் தடந் தேரின் முன்னர்க் குதித்து, எதிர் குறுகி, நின்றான். 190

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#251 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:09 PM


கும்பகருணன் அங்கதன் உரையாடல்

நின்றவன் தன்னை அன்னான் நெருப்பு எழ நிமர நோக்கி,
'பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ?
அன்று, அவன் மகனோ? எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்தம்மை
வென்றவன் தானோ? யாரோ? விளம்புதி, விரைவின்' என்றான். 191

'நும்முனை வாலின் சுற்றி, நோன் திசை நான்கும் தாவி,
மும் முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம் முனை வீரன் மைந்தன்; நின்னை என் வாலின் வீக்கி,
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட, செல்வென்' என்றான். 192

'உந்தையை, மறைந்து, ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக காட்டலை என்னின், பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய்; நேரே
வந்தனை புரிவர் அன்றே, வீரராய் வசையின் தீர்ந்தார்? 193

'இத்தலை வந்தது, என்னை இராமன்பால், வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த
முத் தலை அயிலின் உச்சி முதுகு உற, மூரி வால்போல்
கைத்தலம் காலும் தூங்க, கிடத்தலைக் கருதி' என்றான். 194
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#252 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:09 PM


அங்கதன் எறிந்த தண்டு பல துண்டமாதல்

அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து, அசனி குன்றத்து
உற்றது போலும் என்னும் ஒலிபட, உலகம் உட்க,
பொன் தடந் தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு. 195

அனுமன் போரிடுதல்

தண்டு இற, தடக் கை ஓச்சி, 'தழுவி அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவென்' என்னா, தலையுறக் குனிக்குங் காலை,
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த,
மண் திறப்பு எய்த வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான். 196

மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில், குன்றம் ஒன்று
பறித்து, அவன் நெற்றி முற்றப் பரப்பிடை, பாகம் உள்ளே
செறித்தெனச் சுரிக்க வீசி, தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 197

தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றதன்ன
மலையினைக் கையின் வாங்கி, மாருதி வயிர மார்பின்,
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப,
குலை உறு பொறிகள் சிந்த, வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 198

அவ்வழி வாலி சேயை அரிகுல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார்; மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி,
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 199

'எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி' என்றான். 200

மாற்றம் அஃது உரைப்பக் கேளா, மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து, 'நீ கொணர்ந்த குன்றை
ஏற்றனென்; ஏற்ற காலத்து, இறை அதற்கு ஒற்கம் எய்தின்,
தோற்றனென், உனக்கு; என் வன்மை சுருங்கும்' என்று அரக்கன் சொன்னான். 201

மாருதி, 'வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு' என்று, பெருங் கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிரக் குன்றைக் காத்திலன், தோள் மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க. 202

இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, 'இவனது ஆற்றல்
அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும்' என்னா, மாருதி பெயர்ந்து போனான். 203
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#253 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:10 PM


குரக்குச் சேனையின் அழிவு

'எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய, யாரும்
முழுவதும் மாள்வர், இன்றே இவன் வலத்து அமைந்த முச் சூழ்
கழுவினில்' என்று வானோர் கலங்கினார், நடுங்கினாரால்-
'பொழுதினின் உலகம் மூன்றும் திரியும்' என்று உள்ளம் பொங்கி. 204

தாக்கினார்; தாக்கினார்தம் கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை-
ஆக்கினான்; களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான்; ஆண்மையாலே புதுக்கினான், புகழை அம்மா! 205

'சங்கத்து ஆர் குரங்கு சாய, தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான்? வேறும் ஓர் இலங்கை உண்டோ?
எங்குற்றார் எங்குற்றார்?' என்று எடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
துங்கத் தோள் கொட்டி, ஆர்த்தான்-கூற்றையும் துணுக்கம் கொண்டான். 206

பறந்தலை அதனின் வந்த பல் பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்ற இரிதலின், யாரும் இன்றி
வறந்தது; சோரி பாய வளர்ந்தது, மகர வேலை-
குறைந்துளது, உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன. 207
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#254 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:11 PM


இலக்குவன்-கும்பகருணன் போர்

குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன; குரங்கின்
வென்றி அம் பெருஞ் சேனை ஓர் பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது' என்று உரைத்தலும், அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன், ஒரு தனிச் சுமித்திரை சிங்கம். 208

நாண் எறிந்தனன், சிலையினை; அரக்கியர் நகு பொன்
பூண் எறிந்தனர்; படியிடை இடி பொடித்தென்னச்
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன; அலகை,
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை. 209

இலக்குவன் கடிது ஏவின, இரை பெறாது இரைப்ப,
சிலைக் கடுங் கணை நெடுங் கணம் சிறையுடன் செல்வ,
உலைக் கொடுங் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி,
குலக் கயங்களில் குளித்தன; குடித்தன, குருதி. 210

அலை புடைத்த வாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ;
சில, சிரத்தினைத் துணித்து, அவை திசைகொண்டு செல்வ;
கொலை படைத்த வெங் களத்திடை விழா, கொடு போவ;
தலை படைத்தன போன்றனவால், நெடுஞ் சரங்கள். 211

உருப் பதங்கனை ஒப்பன சில கணை, ஓடைப்
பொருப்பதங்களை உருவி, மற்று அப்புறம் போவ,
செருப் பதம் பெறா அரக்கர்தம் தலை பல சிந்தி,
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன, முழை புகு பாம்பின். 212

மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடிங் கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும், கடைக் குழை முதுகின்
பின்பு நின்றவர் பிடர்க்கும், இவ் விசை ஒக்கும், பிறழா. 213

போர்த்த பேரியின் கண்ணன, காளத்தின் பொகுட்ட,
ஆர்த்த வாயன, கையன, ஆனையின் கழுத்த,
ஈர்த்த தேரன, இவுளியின் தலையன, எவர்க்கும்
பார்த்த நோக்கன, கலந்தன-இலக்குவன் பகழி. 214

மருப்பு இழந்தன;-களிறு எலாம்-வால் செவி இழந்த,
நெருப்பு உகும் கண்கள் இழந்தன; நெடுங் கரம் இழந்த;
செருப் புகும் கடுங் காத்திரம் இழந்தன; சிகரம்
பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட. 215

நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின், திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலை படப் பட, மயங்கின சாய்ந்த;
உரம் தலத்துற உழைத்தவால்; பிழைத்தது ஒன்று இல்லை-
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலாக் குதிரை. 216

பல்லவக் கணை பட, படு புரவிய, பல் கால்
வில்லுடைத் தலையாளொடு சூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றில-கொடி நெடுந் தேர்கள். 217

பேழை ஒத்து அகல் வாயன பேய்க் கணம் முகக்கும்
மூழை ஒத்தன-கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன, உதிரத்
தாழி ஒத்த வெங் குருதியில் மிதப்பன, தலைகள். 218
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#255 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:11 PM

ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன-அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன, துடிகளின் நவை தீர்
வட்ட வான்கணில், வதிந்தன வருண சாமரைகள். 219

எரிந்த வெங் கணை நெற்றியில் படுதொறும், யானை,
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்,
திரிந்த வேகத்த, பாகர்கள் தீர்ந்தன, செருவில்
புரிந்த வானரத் தானையில் புக்கன, புயலின். 220

வேனிலான் அன்ன இலக்குவன் கடுங் கணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர் தம் படைக்கல வாரி
போன போன வன் திசைதொறும் பொறிக் குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின்நின்று உதிர்ந்தென வீழ்ந்த. 221

கரம் குடைந்தன, தொடர்ந்து போய்க் கொய் உளைக் கடு மாக்
குரம் குடைந்தன, வெரிநுறக் கொடி நெடுங் கொற்றத்
தரம் குடைந்தன, அணி நெடுந் தேர்க் குலம் குடைந்த,-
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா! 222

'துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை' எனும் இது கண்டோம்;
இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும்,
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223

மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல்
நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர,
இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத்
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224

ஒருவரைக் கரம், ஒருவரைச் சிரம், மற்று அங்கு ஒருவர்
குரை கழல் துணை, தோள் இணை, பிற மற்றும் கொளலால்,
விரவலர்ப் பெறா வெறுமைய ஆயின; வெவ்வேறு
இரவு கற்றன போன்றன-இலக்குவன் பகழி. 225

சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி,
சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால்,
நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226

அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட, அரக்கர்,
'இறத்தும், இங்கு இறை நிற்பின்' என்று இரியலின் மயங்கி,
திறத்திறம் படத் திசைதொறும் திசைதொறும் சிந்திப்
புறத்தின் ஓடினர், ஓடின குருதியே போல. 227
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#256 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:12 PM


இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்

செருவில் மாண்டவர் பெருமையும், இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும், நோக்கிய புலத்தியன் மருமான்,
'திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின்
ஒரு விலாளர்' என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான். 228

படர் நெடுந் தடத் தட்டிடைத் திசைதொறும் பாகர்
கடவுகின்றது, காற்றினும் மனத்தினும் கடியது,
அடல் வயங் கொள் வெஞ் சீயம் நின்று ஆர்க்கின்றது, அம் பொன்
வட பெருங் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான். 229

அனுமன் தோள் மீது இலக்குவன் ஏறிச் சென்று பொருதல்

தொளை கொள் வான் நுகச் சுடர் நெடுந் தேர் மிசைத் தோன்றி,
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெஞ் செருத் தொழில் மலைய,
'கிளை கொளாது, இகல்' என்று எண்ணி, மாருதி கிடைத்தான்,
'இளைய வள்ளலே! ஏறுதி தோள்மிசை' என்றான். 230

ஏறினான், இளங் கோளரி; இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்தது, வானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது, அவ் அனுமன் தன் தடந் தோள் 231

தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள்மேல்,
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்,
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி, பிறிது எடுத்து இயம்புவது யாதோ? 232

ஆங்கு, வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்,
தாங்கு பல் கணைப் புட்டிலும் தகை பெறக் கட்டி,
வீங்கு தோள் வலிக்கு ஏயது, விசும்பில் வில் வெள்க,
வாங்கினான், நெடு வடவரை புரைவது ஓர் வரி வில். 233

Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#257 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:12 PM


கும்பகருணனின் வீரவார்த்தையும், இலக்குவனின் மறுமொழியும்

'இராமன் தம்பி நீ; இராவணன் தம்பி நான்; இருவேம்
பொரா நின்றேம்; இது காணிய வந்தனர், புலவோர்;
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து,
விராவு நல் அமர் விளைக்குதும், யாம்' என விளம்பா, 234

'பெய் தவத்தினோர் பெண்கொடி, எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள், நாசி வெஞ் சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்; காக்குதி' என்றான். 235

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர,
மல்லினால் செய்த புயத்தவன், 'மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம், யாம்' எனச் சொன்னான். 236
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#258 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:13 PM


இருவரும் செய்த பெரும்போர்

'விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்தது' என்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழி
எண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான். 237

கொம்பு நாலுடைக் குலக் கரிக் கும்பத்தில் குளித்த,
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய, உரும் எனச் செல்வ,
வெம்பு வெஞ் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான். 238

அறுத்த காலையின், அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது, ஆயிரம் உருவது, திசைமுகன் உதவப்
பொறுத்தது, ஆங்கு ஒரு புகர் முகக் கடுங் கணைப் புத்தேள்,
'இறுத்து மாற்று, இது வல்லையேல்' என்று, கோத்து, எய்தான். 239

புரிந்து நோக்கிய திசைதொறும், பகழியின் புயலால்,
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்,
தெரிந்து, மற்ற அதுதன்னை ஓர் தெய்வ வெங் கணையால்
அரிந்து வீழ்த்தலும், ஆயிரம் உருச் சரம் அற்ற. 240

ஆறு-இரண்டு வெங் கடுங் கணை அனுமன்மேல் அழுத்தி,
ஏறு வெஞ் சரம் இரண்டு இளங் குமரன்மேல் ஏற்றி,
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து, ஒரு நொடியில்,
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன், கொடியோன். 241

மறைத்த வாளிகள் எவற்றையும், அவற்றினால் மாற்றி,
துறைத் தலம்தொறும் தலம்தொறும் நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங் கரி, பரி, யாளி, மாப் பூதம்,
திறத் திறம் படத் துணித்து, அவன் தேரையும் சிதைத்தான். 242

தேர் அழிந்தது, செங் கதிர்ச் செல்வனைச் சூழ்ந்த
ஊர் அழிந்ததுபோல்; துரந்து ஊர்பவர் உலந்தார்;
நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை நிமிர்ந்த
பார வெஞ் சிலை அழிந்தெனத் துமிந்தது, அப் பரு வில் 243

செய்த போரினை நோக்கி, இத் தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடுங் கோள் அரி முதலிய குழுவை
எய்து கொன்றனனோ? நெடு மந்திரம் இயம்பி,
வைது கொன்றனனோ? என, வானவர் மயர்ந்தார். 244
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#259 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:13 PM


இருவரும் தரையில் நின்று பொருதல்

ஊன்று தேரொடு சிலை இலன், கடல் கிளர்ந்து ஒப்பான்,
'ஏன்று, மற்று இவன் இன் உயிர் குடிப்பென்' என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ் சுடர்ச் சூல வெங் கூற்றினைத் தொட்டான். 245

இழியப் பாய்ந்தனன், இரு நிலம் பிளந்து இரு கூறா,-
கிழியப் பாய் புனல் கிளர்ந்தெனக் கிளர் சினத்து அரக்கன்;
'பழி அப்பால்; இவன் பதாதி' என்று, அனுமன் தன் படர் தோள்
ஒழியப் பார்மிசை இழிந்து சென்று, இளவலும் உற்றான். 246

உற்ற காலையின், இராவணன், தம்பி மாடு உதவ,
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ,
முற்றி அன்னது, முழங்கு முந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது, சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து. 247

இரிந்து வானவர் இரியலின், மயங்கினர் எவரும்;
சொரிந்த வெம் படை துணிந்திட, தடுப்ப அருந் தொழிலால்
பரிந்த அண்ணலும், பரிவிலன் ஒரு புடை படர,
புரிந்த அந் நெடுஞ் சேனை அம் கருங் கடல் புக்கான். 248

முருக்கின் நாள்மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர்க் கருந் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெருங் கனலிடைப் பெய்து பெய்து, எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட. 249

கரியின் கைகளும், புரவியின் கால்களும், காலின்
திரியும் தேர்களின் சில்லியும், அரக்கர்தம் சிரமும்,
சொரியும் சோரியின் துறைதொறும் துறைதொறும் கழிப்ப,
நெரியும் பல் பிணப் பெருங் கரை கடந்தில, நீத்தம். 250

கொற்ற வாள், எழு, தண்டு, வேல், கோல், மழு, குலிசம்,
மற்றும் வேறு உள படைக்கலம், இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட, தொகையாய்
அற்ற துண்டங்கள் படப் பட, துணிந்தன அனந்தம். 251

குண்டலங்களும், மவுலியும், ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம் என்று இனையன, தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன, வானில். 252

பரந்த வெண்குடை, சாமரை, நெடுங் கொடி, பதாகை,
சரம் தரும் சிலை, கேடகம், பிச்சம், மொய் சரங்கள்
துரந்து செல்வன, குருதி நீர் ஆறுகள் தோறும்
நிரந்த பேய்க்கணம் கரைதொறும் குவித்தன, நீந்தி. 253
Posted Image

விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!

--- இவள் - சத்தியா ---
0

* top of the page
* Back to top of the page up there ^

#260 User is offline சத்தியா

*
* மூத்தவர்
* PipPipPipPipPipPipPipPipPipPip

* Group: தூண்கள்
* Posts: 35,262
* Joined: 03-September 10
* Current Mood: Current Mood: None Chosen

Posted 06 April 2010 - 03:14 PM


கும்பகருணன்-சுக்கிரீவன் போர்

ஈண்டு வெஞ் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்,
நீண்ட வெள் எயிற்று அரக்கன், மற்றொரு திசை நின்றான்,
பூண்ட வெஞ் செரு இரவி கான்முளையொடு பொருதான்;
'காண்தகும்' என, இமையவர் குழுக்கொண்டு, கண்டார். 254

பொறிந்து எழு கண்ணினன், புகையும் வாயினன்,-
செறிந்து எழு கதிரவன் சிறுவன்-சீறினான்,
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள்' என,
எறிந்தனன், விசும்பில், மா மலை ஒன்று ஏந்தியே. 255

அம் மலை நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெங் களிறும், சேனையின்
வெம் மலை வேழமும், பொருத; வேறு இனி
எம் மலை உள, அவற்கு எடுக்க ஒணாதன? 256

இவ்வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய, நிருதர்தம் களிறும் கட்டு அற;
அவ் வகை மலையினை ஏற்று, ஓர் அங்கையால்
வவ்வினன், அரக்கன், வாள் அவுணர் வாழ்த்தினார். 257

ஏற்று ஒரு கையினால், 'இதுகொல், நீ அடா!
ஆற்றிய குன்றம்?' என்று, அளவு இல் ஆற்றலான்,
நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து, 'நீங்கு' எனா,
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார். 258

vedio

vedio

thankyou


Custom Glitter Text
நன்றி